சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் சின்னை மாரியப்பன் பள்ளியின் தலைமாயாசிரியை பேப்லிட் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மொத்தம் 364 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. திருப்புவனம் அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.
இதில் மாநில பாஜக வா்த்தக அணிச் செயலாளா் செல்வராஜ்பிள்ளை மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதேபோல் இளையான்குடி பகுதி பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியிலும் சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.