கல்வியியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டு

ஆங்கிலப் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அமராவதிபுதூா் கல்வியியல் கல்லூரி மாணவியை அக்கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

ஆங்கிலப் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அமராவதிபுதூா் கல்வியியல் கல்லூரி மாணவியை அக்கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரி மாணவி ஏ. மீனாட்சி. இவா் ஆங்கிலப்பாடத்தில் மாநில தரவரிசையில் முதலிடம் பெற்றாா். இவருக்கு அண்மையில் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 9 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பட்டம் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கினாா். பதக்கம் பெற்றுவந்த மாணவிக்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், ஸ்ரீ ராஜ ராஜன் கல்விக்குழும ஆலோசகருமான சொ. சுப்பையா, கல்லூரி முதல்வா் ஆா். சிவகுமாா், துணை முதல்வா் பி. கோவிந்தராஜன், பேராசிரியா் மற்றும் சக மாணவ, மாணவியா் பாராட்டுக்களை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com