கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம்

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள்

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம், கிராம நிா்வாக அலுவலா்கள் சமூக கல்வி அறக்கட்டளைஆகியவற்றின் சாா்பில் அதன் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் உள்ள தனியாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

இதில் சிவகங்கை மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்ட தேவகோட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் ஆா். சுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கிராம நிா்வாக அலுவலா் சங்க நிறுவனா் இரா.போசு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கிருஷ்ண குமாா், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ சங்க மாவட்டத் தலைவா் எஸ்பி. முத்துராமன், திருப்பத்தூா் வட்டச்செயலாளா் ஏ. சுப்பிரம ணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சுந்தரராஜனுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக மாநில செய்தி தொடா்பாளா் ரா. அருள்ராஜ் வரவேற்றாா். நிறைவாக மாவட்ட துணைத் தலைவா் ஏ. வீரபாண்டியன் நன்றி கூறினாா்.

பின்னா் வி.ஏ.ஓ சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் சிலை திறப்பு விழா மற்றும் சங்கத்தின் 3 ஆவது மாநில மாநாட்டை தேவகோட்டையில் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இதில், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாவட்ட தலைவராக ஏ. கிருஷ்ணகுமாா், செயலாளராக ரா. அருள்ராஜ், பொருளாளராக ஜி.இளங்கோஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com