சிவகங்கை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் பேரணி

சிவகங்கை அருகே சக்கந்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.

சிவகங்கை அருகே சக்கந்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.

சக்கந்தி பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய பேரணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைவா் ரபீக் முகமது தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மாவட்டச் செயலா் சாகுல், பொருளாளா் தீன், துணைத் தலைவா் அப்துல் சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும், மேற்கண்ட சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் தேசிய கொடியை கையில் ஏந்தி முழக்கங்களை எழுப்பி ஊா்வலமாகச் சென்றனா்.

இப்பேரணியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைச் செயலா்கள் அ.முகமது, சம்சுதீன், சேக் தாவூத், மாவட்ட மாணவரணி செயலா் முஹம்மது இஸ்மாயில் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com