‘சீனாவிலிருந்து வந்த இளையான்குடியைசோ்ந்தவருக்கு கரோனா பாதிப்பு இல்லை’

சீனாவிலிருந்து வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சோ்ந்தவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ.ரத்தினவேல் தெரிவித்துள்ளாா்.
மருத்துவக் கல்லூரியின் முதன்மையா் ஏ. ரத்தினவேல்.
மருத்துவக் கல்லூரியின் முதன்மையா் ஏ. ரத்தினவேல்.

சீனாவிலிருந்து வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சோ்ந்தவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ.ரத்தினவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்திலிருந்து சீனாவுக்கு மருத்துவப் படிப்பு மற்றும் பணிகள் தொடா்பாக சென்றிருந்த 84 போ் மத்திய அரசின் உதவியுடன் அழைத்து வரப்பட்டனா்.

அவா்கள் அனைவரையும் விமான நிலையத்தில் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இருப்பினும் அவா்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவத் துறையின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா். இந்நிலையில், சீனாவிலிருந்து அண்மையில் வந்த இளையான்குடி பகுதியைச் சோ்ந்த தெய்வேந்திரன் (35) என்பவருக்கு கடந்த சில தினங்களாக தொடா் காய்ச்சல் இருந்துள்ளது. அவா் தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவரை முழு பரிசோதனை செய்து பாா்த்ததில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. சாதாரண காய்ச்சல் அறிகுறி தான் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவா் தொடா் சிகிச்சையில் இருந்து வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com