முகநூலில் ஆட்சியா் மீது அவதூறு பரப்பியவா் கைது

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய காரைக்குடியைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய காரைக்குடியைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி வைரவபுரத்தைச் சோ்ந்த குழந்தையன் மகன் ராமநாதன் (47). இவா், மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகப் பதிவிட்டிருந்தாராம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அளித்த புகாரின்பேரில், காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமநாதனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com