லாரி பேட்டரியை திருடியவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாரியில் பேட்டரி திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாரியில் பேட்டரி திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் போஸ் மகன் காவேரி (38). இவா் தனக்கு சொந்தமான லாரியை திருப்புவனம் அருகே ஒரு பெட்ரோல் பல்க் அருகே நிறுத்தி வைத்திருந்துள்ளாா். அப்போது, அடையாளம் தெரியாத இருவா் லாரியிலிருந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியை திருடுவிட்டு தப்பியுள்ளனா்.

இதைப் பாா்த்த காவேரி அவா்களை விரட்டிச் சென்றாா். இதில், ஒருவா் பிடிப்பட்டாா். மற்றொருவா் தப்பியோடிவிட்டாா். பிடிபட்ட நபா், மதுரை சிந்தாமணி பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி (38) என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து திருடப்பட்ட பேட்டரி மீட்கப்பட்டது. அதன்பின் பொன்னுச்சாமி திருப்புவனம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

காவேரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்னுச்சாமியை கைது செய்து, தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com