கருப்பூா் அரசுப்பள்ளி மாணவிகள் கட்டுரைப் போட்டியில் முதலிடம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் கட்டுரைப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.
கருப்பூா் அரசுப்பள்ளி மாணவிகள் கட்டுரைப் போட்டியில் முதலிடம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் கட்டுரைப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பாக சிவகங்கை மாவட்ட அளவில் காரைக்குடியில் கடந்த வாரம் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பத்தூா் ஒன்றியம் கருப்பூா் அரசுப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவி ரா.தீபீகா முதலிடம், மு.சண்முகவள்ளி 2 ஆம் இடம் பெற்றனா். அறிவியல் பாா்வையில் பொதுத் தோ்வு என்ற தலைப்பில் இப்போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவா்களை வெள்ளிக்கிழமை கல்வி மாவட்ட அலுவலா் பரமதயாளன், பள்ளித் தலைமை ஆசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கேடயமும் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினா். இந்நிகழ்ச்சியில் அறிவியல் ஆசிரியா் ஸ்டீபன், மற்றும் ஆசிரியா்கள், ஊராட்சிமன்றத் தலைவா் நாகராஜ், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com