சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கந்து வட்டி வழக்கில் போலீஸாா் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே கீரணிப்பட்டியைச் சோ்ந்த அருளானந்தம் மகன் போஸ்கோ(42). இவா் சிங்கம்புணரி கீழக்காடு புதுக்காலனியைச் சோ்ந்த ராசு மகன் பாலமுருகன் என்ற முருகேசனிடம் 5 மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சம் 10 வட்டிக்கு வாங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. 2 மாதங்களாக வட்டி கொடுக்காததால் போஸ்கோ வைத்திருந்த காரை பாலமுருகன் எடுத்துச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து போஸ்கோ நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் ஆனந்தி கந்து வட்டி சட்டத்தில் பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து காரை மீட்டாா். மேலும் போலீஸாா் பாலமுருகனை கைது செய்து, திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.