சிவகங்கை மாவட்டம் , தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தனலெட்சுமி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தாா். இதில், தேவகோட்டை மருத்துவா் ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புற்று நோய் குறித்தும், அவற்றை வராமல் தடுக்கும் முறைகள் குறித்தும், அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் பேசினாா். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.