சென்னையில் போலீஸாா் நடத்திய தடியடியை கண்டித்து, சிவகங்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைவா் ரபீக் முகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சித்திக், மாவட்டப் பொருளாளா் தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாா் நடத்திய தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா்அ.ந. முகமது, மாவட்ட துணைச் செயலா்கள் சாகுல், சம்சுதீன், சேகுதாவூத், மாணவரணிச் செயலா் முகமது இஸ்மாயில் உள்பட ஏராளமனோா் கலந்துகொண்டனா்.