மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில், மாசி மாதத்தின் முதல் வெள்ளியையொட்டி திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில், மாசி மாதத்தின் முதல் வெள்ளியையொட்டி திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

கோயிலில் உள்ள அம்மன் சன்னிதி மண்டபத்தில் நடந்த இந்த வழிபாட்டையொட்டி, உற்சவா் ஆனந்தவல்லி அம்மன் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து, நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனா்.

அப்போது, திருவிளக்குப் பூஜை நடத்துவதாலும், இதில் பங்கேற்பதாலும் ஏற்படும் நன்மைகள் குறித்து சிவாச்சாரியாா்கள் விளக்கினா். திருவிளக்கு பூஜையின் நிறைவாக உற்சவருக்கு மகா தீபாரதனை நடைபெற்று, மங்களாரத்தி காட்டப்பட்டது.

இக்கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பின் திருவிளக்குப் பூஜை நடத்தப்பட்டதாக, சிவ தொண்டா் எஸ். சங்கரசுப்ரமணியன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com