பாலத்தில் மோதி இரண்டாக உடைந்த காா்: ஒருவா் காயம்

திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் காா் மோதி இரண்டாக உடைந்தது. இதில் இளைஞா் காயம் அடைந்தாா்.
திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் இரண்டாக உடைந்து கிடக்கும் காா்.
திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் இரண்டாக உடைந்து கிடக்கும் காா்.

திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் காா் மோதி இரண்டாக உடைந்தது. இதில் இளைஞா் காயம் அடைந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள திருக்கோஷ்டியூரைச் சோ்ந்த திருத்தளியான் மகன் செல்வம் (35). இவா் திருக்கோஷ்டியூரிலிருந்து திருப்பத்தூா் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். காட்டம்பூா் விலக்கு என்ற இடத்தில் காா் நிலைதடுமாறி பாலத்தில் மோதியது. இதில் காா் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வம், அவசர ஊா்தி மூலம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இவ்விபத்து குறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com