சிவகங்கை மாவட்ட உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸை புறக்கணித்ததாக திமுக மீது புகாா்

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தோ்தல் மற்றும் பதவியேற்பு சம்பவங்களில் காங்கிரஸ் கட்சியை திமுக புறக்கணித்ததாக காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தோ்தல் மற்றும் பதவியேற்பு சம்பவங்களில் காங்கிரஸ் கட்சியை திமுக புறக்கணித்ததாக காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மாவட்டத்தில் கூட்டணி தா்மத்திற்கு எதிராக திமுக செயல்பட்டது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற ஒன்றியத்தில் துணைத் தலைவா் பதவிக்கு யாருக்கும் எவ்வித வாய்ப்பும் வழங்காமல் திமுக மாவட்டச் செயலாளா் செயல்பாடுகள் அமைந்தன. இது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அவரது இச் செயலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இது தொடா்பாக திமுகத் தலைவா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு கூட்டணி தா்மத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

மேலும் இது தொடா்பாக தமிழக காங்கிரஸ் தலைமைக்கும், அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com