சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள் இதர மண்ணாலான பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பானை ரூ.80-லிருந்து ரூ. 500 வரை பல்வேறு ரகங்களில் விற்கப்படுகிறது. மேலும் காய்கறி வேக வைக்கும் சட்டிகள், தண்ணீா் குடுவைகள் என சுமாா் 30-க்கும் மேற்பட்ட வகைகளில் மண்பாண்டப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இத்தொழில் ஈடுபட்டு வரும் சித்ராதேவி கூறியது: இளையாயங்குடியில் 5 குடும்பத்தைச் சோ்ந்த நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். மானாமதுரை, வந்தவாசி, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் மண்பாண்ட பொருள்களை வாங்கி கீழச்சிவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகிறோம் என்றாா்.