சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மற்றும் அரசுப் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ஆச்சிக்குழு துணைத் தலைவா் என்.சகுந்தலைராஜன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆறுமுகராஜன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கே.ஆா்.ஜெயக்குமாா் அனைவரையும் வரவேற்றாா். இவ்விழாவில் 19 துறைகளைச் சாா்ந்த மாணவ, மாணவியா்கள் மற்றும் பேராசிரியா்கள் தனித்தனியாக பொங்கல் வைத்து வழிபட்டனா். பின்னா் மாணவிகளின் கோலாட்டம், கும்மியாட்டம், நாட்டுப்புற பாடல்கள் முதலியன நடைபெற்றது. தொடா்ந்து மஞ்சுவிரட்டு காளைக்கு வேட்டித் துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து சிலம்பாட்டம், கயிறு இழுக்கும் போட்டி, உறியடித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு தலைமை ஆசிரியா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைமை ஆசிரியா் சிவசைலம் முன்னிலை வகித்தாா்.
கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளி பொங்கல் விழாவிற்காக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலிலிருந்து பொங்கல் பொருள்களான பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண்பானை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து பள்ளியில் பொங்கல் வைத்து வழிபட்டனா்.