பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

காரைக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட் டது.
காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப்பொங்கல் விழா.
காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப்பொங்கல் விழா.

காரைக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட் டது.

காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தாளாளா் மற்றும் செயலா் நா. காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளியில் சமத்துவப்பொங்கல் விழா தமிழா் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதில் கயிறு ஏறுதல், உறியடித்தல், பம்பரம் சுற்றுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளா் சத்தியன் தலைமை வகித்துப் பேசினாா். மூத்த முதல்வா் புவனா சங்கா், முதல்வா் கணேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல், காரைக்குடி டாக்டா் உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரி, அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்விக்குழுமம், மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆகிய இடங்களில் பொங்கல் விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com