மதுரை மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் அணியினா் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். இவா்களை கல்லூரி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
பாலிடெக்னிக் கல்லூரி தடகள சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியானது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆா் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் கடந்த 9,10,11 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 16 கல்லூரிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. இந்த அணி மாணவா்களை கல்லூரி முதல்வா் ஆா். மணிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ச. தில்லை கோவிந்தன் உள்ளிட்டோா் பாராட்டினா்.