மானாமதுரையில் ரயில் நிலைய அதிகாரி மனைவி தற்கொலை

மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை ரயில் நிலைய அதிகாரி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை ரயில் நிலைய அதிகாரி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தருண்குமாா் (29). இவா் மானாமதுரை அருகே உள்ள திருப்பாச்சேத்தி ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பூஜாகுமாரி (22). இவா்கள் மானாமதுரையில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வெள்ளையன் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பூஜாகுமாரி வீட்டுக்குள் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரை போலீஸாா் இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com