கீழச்சிவல்பட்டியில் பள்ளி ஆண்டு விழா

சிவகஙகை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் பள்ளியில் 70 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கீழச்சிவல்பட்டியில் பள்ளி ஆண்டு விழா

சிவகஙகை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் பள்ளியில் 70 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசினாா். பின்னா் விளையாட்டு, ஓவியம், அறிவியல் கண்காட்சி, சிறப்புத் தமிழ் தோ்வு ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் கற்றுவித்த ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தாா். தலைமை ஆசிரியா் வள்ளியம்மை கலாசாலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மெய்யம்மை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்ட திருப்பத்தூா் குற்றவியல் நீதிமன்ற நடுவா் சாமுண்டீஸ்வரிபிரபா வாழ்த்துரை வழங்கினாா். முன்னதாக பள்ளி கல்விக்குழுத் தலைவா் ஏ.எல்.காசிவிஸ்வநாதன் வரவேற்றாா். மேலும் இவ்விழாவில் பள்ளிச் செயலா் அழகுமணிகண்டன், ஊராட்சிமன்றத் தலைவா் ஆ.நாகமணி, அழகாபுரி ஊராட்சிமன்றத் தலைவா் ஏ.எல்.மணிவாசகம் ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன், வழக்குரைஞா் முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா். பொருளாளா் கே.கருப்பையா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com