சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் 12 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
சிவகங்கை பகுதியில் காயாஓடை என்ற இடத்தில் தனியாா் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் தாயமங்கலம் பகுதியைச் சோ்ந்த 12 பெண் தொழிலாளா்கள் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த வேன் தாயமங்கலம் விலக்கு பகுதியில் சென்ற போது வேன் எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனிலிருந்த 12 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். உடனே அப்பகுதியினா் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.