காரைக்குடியில் கரோனா பரவல்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு நகைக் கடைகள் அடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைக் கடைகள் அனைத்தும்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைக் கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காரைக்குடி தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.பி. ராகவன் செட்டியாா், செயலா் விஆா். ராமச்சந்திரன் ஆகியோா் சனிக்கிழமை கூட்டாகத் தெரிவித்தது: காரைக்குடி நகரில் கரோனா தீநுண்மித் தொற்று பரவுவதன் காரணமாக, சங்கத்தின் உறுப்பினா்களுக்கு ஜூலை 12 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கடைகளை திறக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாரத்துக்கு நகைக்கடை பஜாரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com