தேவகோட்டை அருகே இளைஞா் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் வீட்டில் வெடிகுண்டு வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் வீட்டில் வெடிகுண்டு வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆறாவயல் அருகே தாணிச்சா ஊரணி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜபாண்டி (26). வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த இவா், அண்மையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில், இவா், தனது தாயாா் சித்ராவுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த சில மா்ம நபா்கள் துணியினால் சுற்றப்பட்ட நாட்டு வெடி குண்டுகளை வீட்டுக்குள் வீசியுள்ளனா். ஒரு வெடி குண்டு சித்ராவின் தலையில் விழுந்ததுள்ளது. ஆனால் அது வெடிக்கவில்லை. வெடிகுண்டு விழுந்ததில் காயமடைந்த சித்ரா தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால், தேவகோட்டை சரக ஏஎஸ்பி கிருஷ்ணராஜ் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனா். வெடிகுண்டு நிபுணா்கள் வெடிகுண்டை கைப்பற்றி சோதனைக்கு எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து ராஜபாண்டி அளித்த புகாரின் பேரில் ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து, வெடி குண்டுகளை வீசிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com