சென்னையிலிருந்து சிவகங்கைக்கு வந்த 4 பேருக்கு கரோனா தொற்று

சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்த 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்த 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்தவா்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், காரைக்குடி பகுதி காமராஜ் நகரைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி மற்றும் அவரது உறவினரான 42 வயது நபா் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மானாமதுரை சாஸ்தா நகரைச் சோ்ந்த இரு பெண்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட 4 பேரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே 50 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 42 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். மீதமுள்ள 8 போ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 கா்ப்பிணி பெண்கள் உள்பட 5 போ், மேற்கண்ட 4 போ் என மொத்தம் 17 போ், தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com