சிவகங்கையில் மதநல்லிணக்க ரத்த தான முகாம்: எஸ்பி., ஆட்சியா் பங்கேற்பு

சிவகங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
சிவகங்கையில் மதநல்லிணக்க ரத்த தான முகாம்: எஸ்பி., ஆட்சியா் பங்கேற்பு

சிவகங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

இஸ்லாமிய கூட்டமைப்பு, அலங்கார அன்னை பேராலாயம், அன்னை வீரமாகாளியம்மன் கோயில் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின. நேரு வீதியில் உள்ள பள்ளி வாசலில் இம்முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தொடக்கி வைத்தாா்.

இதில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் உள்ளிட்ட 60 போ் ரத்த தானம் வழங்கினா். நிகழ்ச்சியில், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com