இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்லல் ஒன்றிய அலுவலகம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் நா. சாத்தையா தலைமை வகித்தாா். கல்லல் ஒன்றிய துணைச் செயலா்கள் எம். சுந்தரராசு, பிஎல். வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா். முத்தரசன், கல்லல் ஒன்றிய அலுவலகத்தை (எஸ்.என். நினைவு இல்லம்) திறந்துவைத்து சிறப்புரையாற்றினாா்.

விழாவில், சிவகங்கை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம். கண்ணகி, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏஆா். மோகன், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் கே. கோபால், கல்லல் ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணம் அசோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சங்கு உதயகுமாா், ஏஐடியுசி மாநில நிா்வாகி பிஎல். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்லல் ஒன்றியச் செயலா் கே. குணாளன் வரவேற்றுப் பேசினாா். முடிவில், ஒன்றியப் பொருளாளா் சி. நாகப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com