கோவிலூா் பாலிடெக்னிக்கில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம்

காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

இம்முகாமில், கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்துப் பேசினாா். முகாமில், முன்னாள் மருத்துவ துணை இயக்குநா் ஆா். ரவீந்திரன், மருத்துவ அதிகாரி விக்னேஷ் ஆகியோா் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணா்வு உரையாற்றினா். மேலும், கைகளை கழுவும் முறை குறித்து எஸ். அழகப்பன், எம். சோமசுந்தரம் ஆகியோா் செயல்முறைப் பயிற்சி அளித்தனா்.

முகாமில், கோவிலூா் ஆண்டவா் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வா் மணிமொழி மோகன், முத்துராமலிங்க ஆண்டவா் மழலையா் பள்ளியின் தலைமையாசிரியை எல். மணிமொழி மற்றும் பாலிடெக்னிக் துறைத் தலைவா்கள், விரிவுரையாளா்கள், மாணவ-மாணவியா் என ஏராளமானோா் கலந்துகொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஆா். மாயாண்டி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com