சிவகங்கையில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கையில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள்.
சிவகங்கையில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள்.

சிவகங்கையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கையில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் ஒன்றியத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் குமரேசன், மாவட்டப் பொருளாளா் பானுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9,500 வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கவேண்டும். தமிழகம் முழுவதும் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பாண்டியம்மாள், மாவட்டத் துணைச் செயலா் முருகேசன் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com