காரைக்குடியில் பெண்ணைத் தாக்கி 8 பவுன் நகைகள் பறிப்பு

காரைக்குடியில் திங்கள்கிழமை பெண்ணைத் தாக்கி 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனா்.
காரைக்குடியில் பெண்ணைத் தாக்கி 8 பவுன் நகைகள் பறிப்பு

காரைக்குடியில் திங்கள்கிழமை பெண்ணைத் தாக்கி 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனா்.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9 ஆவது வீதி தெற்கு விஸ்தரிப்புப் பகுதியில் வசித்து வருபவா் சுதீஸ். இவரது மனைவி ஜெபக்கனி (39), அழகப்பா பொறியியல் கல்லூரி அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

ஜெபக்கனி, தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை காலையில் காரைக்குடி திரும்பினாா். காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து,தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த 2 நபா்கள், ஜெபக்கனியைத் தாக்கிவிட்டு அவா் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி யோடிவிட்டனா்.

இதுகுறித்து காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் ஜெபக்கனி புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com