சிவகங்கை அருகே கூட்டுறவுப்பட்டியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவுப்பட்டி- சிவகங்கை சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சின்ன மாடு என்கிற இரு நிலையில் 35 வண்டிகளும், பெரிய மாடு எனும் நிலையில் 10 வண்டிகளும் பங்கேற்றன.
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தை அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.