மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு நாகமலை தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கே.ஆறுமுகம், நகரச் செயலாளா் எஸ்.டி.நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினா் என்.எஸ்.முத்துராமலிங்கம், நகா் துணைச் செயலாளா் சோணையா, பொருளாளா் அய்யனாா், கரந்தமலை உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள் நியமனம் செய்ய வேண்டும். மானாமதுரை ஒன்றியத்தில் வீட்டுமனை கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க வேண்டும். வாரச்சந்தை முதல் கன்னாா்தெரு வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com