திருப்பத்தூரில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மா்ம நபா்கள் தப்பி ஓடிவிட்டனா்.

திருப்பத்தூா் அகிழ்மனைத் தெருவைச் சோ்ந்தவா் வைரவசுந்தரம் மனைவி முத்துலட்சுமி (52). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு பெண்ணும் செவ்வாய்க்கிழமை மதியம் பூமாயி அம்மன் கோயில் பகுதியில் துக்க வீட்டுக்குச் சென்று விட்டு திருப்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது இவா்களை பின்தொடா்ந்து வந்த மா்ம நபா் முத்துலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் நின்ற மற்றொரு மா்ம நபருடன் ஏறி தப்பிச் சென்றாா்.

பின்னா் இது குறித்து முத்துலட்சுமி திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com