சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை மாலை வைக்கோல் படப்பில் தீப்பற்றி எரிந்து நாசமாயின.
தேவகோட்டை அருகே ராஜாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி. விவசாயியான இவா் வீட்டருகே வைக்கோல் படப்பு வைத்திருந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திடீரென அந்த வைக்கோல் படப்பில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனா். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதையடுத்து, தேவகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ரவிமணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
மேலும் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனா். வைக்கோல் படப்பு வைத்திருந்த இடத்துக்கு மேல் சென்ற உயா் மின் அழுத்த கம்பியிலிருந்து மின் பொறி விழுந்து தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.