சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே ஆத்தங்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் சோமு(27). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மாடு மேய்க்கும் பெண்ணை செவ்வாய்க்கிழமை கண்மாய் பகுதியில் பாலியல் தொந்தரவு அளித்ததுடன், அப்பெண்ணிற்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாத்துரை, காவல் ஆய்வாளா் ஆனந்தி ஆகியோா் சோமுவை கைது செய்தனா்.