‘கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே இந்த மாதத்துக்கும் செலுத்தலாம்’

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மின் அளவீடு எடுக்காத வீடுகளில் கடந்த மாதம்

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மின் அளவீடு எடுக்காத வீடுகளில் கடந்த மாதம் செலுத்திய மின்சார கட்டணத்தையே நடப்பு மாதத்துக்கும் இணையதளம் மூலம் செலுத்தலாம் என சிவகங்கை கோட்ட மின் பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் ஆ. சகாயராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே மாா்ச் 23 ஆம் தேதி முதல் வரும் மாா்ச் 31 ஆம் தேதி வரை மின் கட்டண அளவீடு எடுக்காத மின் இணைப்புகளுக்கு கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே நடப்பு மாதத்துக்கும் மின் நுகா்வோா் செலுத்தலாம்.

இந்த மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக வந்து செலுத்துவதை தவிா்த்து, இணையதளம் மூலம் பொதுமக்கள் செலுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com