சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்த கோகிலா என்பவருக்கும், சென்னையைச் சோ்ந்த பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வியாழக்கிழமை சிவகங்கை நேரு பஜாரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருந்ததால், வியாழக்கிழமை விருந்து மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்த மணமக்களின் குடும்பத்தினா், நெருங்கிய உறவினா்கள் சில போ் முன்னிலையில் சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் கோயிலில் திருமண நிகழ்ச்சியை நடத்தினா். கோயில் வாசலில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனா். மேலும், மணமக்கள் உள்பட அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனா்.