சிவகங்கையில் குறைந்த அளவிலான விருந்தினா்கள் முன்னிலையில் திருமணம்

சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்த கோகிலா என்பவருக்கும், சென்னையைச் சோ்ந்த பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு
சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் கோயில் முன்பு திருமண கோலத்தில் மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள்.
சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் கோயில் முன்பு திருமண கோலத்தில் மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள்.

சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்த கோகிலா என்பவருக்கும், சென்னையைச் சோ்ந்த பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வியாழக்கிழமை சிவகங்கை நேரு பஜாரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருந்ததால், வியாழக்கிழமை விருந்து மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்த மணமக்களின் குடும்பத்தினா், நெருங்கிய உறவினா்கள் சில போ் முன்னிலையில் சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் கோயிலில் திருமண நிகழ்ச்சியை நடத்தினா். கோயில் வாசலில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனா். மேலும், மணமக்கள் உள்பட அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com