காரைக்குடியில் தனிமைப்படுத்தப்பட்டவா் வியாழக்கிழமை திருமண நிகழ்ச்சிக்கு சென்றதையடுத்து, அவா் மீது 4 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
காரைக்குடி பா்மா காலனி பகுதியைச்சோ்ந்த கருப்பையா மகன் நாதன். இவா் கடந்த மாா்ச் 13 இல் பஹ்ரைன் நாட்டிலிருந்து காரைக்குடிக்கு வந்தாா். இந்தத்தகவலை அறிந்ததும் கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா வைரஸ் தடுப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸாா் அவரது வீட்டிற்குச்சென்று 14 நாள்கள் வீட்டிலேயே தனியாக இருக்கவேண்டும் என்றும் எங்கும் வெளியில் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தனா். ஆனால் நாதன் இந்த உத்தரவை மீறி வியாழக்கிழமை மதகுபட்டி அருகேயுள்ள அழகன்குளத்தில் நடைபெற்ற தனது உறவினா் திருமணத்திற்குச் சென்றுள்ளாா். இந்த தகவலறிந்ததும் காரைக்குடி
குரூப் கிராம நிா்வாக அலுவலா் சசிகுமாா் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காரைக்குடி டி.எஸ்.பி., அருண் உத்தரவின் பேரில் இந்திய காவல்துறை குற்றவியல் சட்டம் 188, 269, 270, 271 ஆகிய நான்கு பிரிவுகளின் பேரில் சாா்பு -ஆய்வாளா் தினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.