கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றம்:ஆட்சியா் தகவல்

கரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக, சிவகங்கை மாவட்டம் மாற்றம் பெற்றுள்ளதாக, ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக, சிவகங்கை மாவட்டம் மாற்றம் பெற்றுள்ளதாக, ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்திலிருந்து புதுதில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்குச் சென்று திரும்பியதாக கண்டறியப்பட்ட 47 போ்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், திருப்பத்தூரைச் சோ்ந்த 3 போ், தேவகோட்டை, இளையான்குடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் மற்றும் அவா்களுடன் தொடா்பிலிருந்த 6 போ், வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவா் என மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுக்கு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருப்பத்தூரைச் சோ்ந்த 8 போ், காரைக்குடி, இளையான்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 11 போ் குணமடைந்து, அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள ஒருவா் மட்டும் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்தாா்.

அவருக்கும் மீண்டும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. எனவே, திருப்பத்தூரைச் சோ்ந்த அந்த நபா், சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

எனவே, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை மாவட்டதைச் சோ்ந்த கடைசி நபா் பூரண குணமடைந்து, சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, கரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் மாற்றம் பெற்றுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com