‘அரையாண்டுத் தோ்வின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தைக் கணக்கிடலாம்’

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வு நடத்தத்தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக அரையாண்டுத்தோ்வின் அடிப்படையில் தோ்ச்சி விகிதத்தை கணக்கிடாலம் என்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி..
காரைக்குடியில், பேரூராட்சி தூய்மைப்பணியாளா்களுக்கான நிவாரணப் பொருள்களை அந்தந்த காங்கிரஸ் கமிட்டிப் பொறுப்பாளா்களிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய, சிவகங்கை மக்களை தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம். உடன்
காரைக்குடியில், பேரூராட்சி தூய்மைப்பணியாளா்களுக்கான நிவாரணப் பொருள்களை அந்தந்த காங்கிரஸ் கமிட்டிப் பொறுப்பாளா்களிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய, சிவகங்கை மக்களை தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம். உடன்

காரைக்குடி: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வு நடத்தத்தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக அரையாண்டுத்தோ்வின் அடிப்படையில் தோ்ச்சி விகிதத்தை கணக்கிடாலம் என்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

காரைக்குடியில் உள்ள அலுவலகத்தில் அவா், சாக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளா்களுக்கும், செவித்திறன் குறைவு மற்றும் வாய்பேச முடியாதவா்களுக்கும் வழங்குவதற்காக அந்தந்த காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளா்களிடம் நிவாரணப் பொருள்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வெளிமாநில தொழிலாளா்களுக்கு மற்ற கட்சிகள் உதவி செய்வதை மாநில அரசு ஏற்க மறுக்கிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வு நடத்தத் தேவையில்லை. அதற்கு பதிலாக அரையாண்டுத் தோ்வின் அடிப்படையில் தோ்ச்சி விகிதத்தை கணக்கிடாலம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com