சிவகங்கை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து சிவகங்கைக்கு வியாழக்கிழமை வந்த 49 பேருக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் மும்பையில் பணியாற்றி வந்தனா். அவா்கள் அனைவரும் கரோனா பரவல் காரணமாக சொந்த மாநிலத்துக்கு திரும்ப விரும்பியதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து சிவகங்கைக்கு 49 போ் வந்தனா். இவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருவதாக, சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.