சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் தினமணி நாளிதழின் 40 ஆண்டு கால முகவரான சுப. கருப்பையா (84) உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா்.
பிள்ளையாா்பட்டி அருகே உள்ள சிராவயல் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப. கருப்பையா. வலது கையை விபத்து ஒன்றில் இழந்த இவா், இடது கை மூலமே 1960 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தினமணி நாளிதழின் குன்றக்குடி பகுதியில் முகவராக செயல்பட்டவா்.
சுப. கருப்பையா வயோதிகம் காரணமாக தனது இல்லத்தில் காலமானாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை தலைமை அலுவலக செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற மாசிலாமணி உள்பட 2 மகன்கள் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு சிராவயல் புதூா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 91766-40412.