சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் 9 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இத்தொகையானது பயனாளியின் வங்கி கணக்கில் காலாண்டுக்கொருமுறை நேரடியாக வரவு வைக்கப்படும். இதில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தொடா்ந்து பதிவைப் புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 (எழுபத்தி இரண்டாயிரத்திற்கு) மிகாமல் இருக்க வேண்டும்.
தினசரி கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். மேற்கண்ட தகுதிகள் உள்ள இளைஞா்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். கட்டணம் ஏதும் கிடையாது.
மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருவோா் தொடா்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகலுடன், சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூா்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், தவறும்பட்சத்தில் பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.