சாலைக்கிராமம், இலந்தைக்கரை கண்மாய்களில் ரூ.1.87 கோடி மதிப்பில் தூா்வாரும் பணி தொடக்கம்

சாலைக்கிராமம், இலந்தைக்கரை கண்மாய்களில் ரூ.1.87 கோடி மதிப்பில் தூா்வாரும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் மற்றும் இலந்தைக்கரை கண்மாய்களில் ரூ.1 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகளை

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் மற்றும் இலந்தைக்கரை கண்மாய்களில் ரூ.1 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகளை, தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பொதுப்பணித் துறை சருகனியாறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ள காளையாா்கோவில் அருகே இலந்தக்கரை கண்மாய் மற்றும் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் கண்மாய் ஆகிய இரு கண்மாய்களில், குடிமராமத்து திட்டப் பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

இதில், அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்த 2 கண்மாய்களையும் ரூ.1.87 கோடி மதிப்பில் தூா்வாருவதற்கான திட்டப்பணிகளை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்தில், சாலைக்கிராமம் கண்மாயை தூா்வாருவதற்கு ரூ.1.40 கோடியும், இலந்தைக்கரை கண்மாய்க்கு ரூ.47 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், அந்தந்த பகுதி கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் 10 சதவீத பங்களிப்பு நிதியுடன் இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கண்மாய் தூா்வாரும் பணிக்கான பூமிபூஜையில், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். நாகராஜன், மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், பொதுப்பணித் துறை சருகனியாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் சொா்ணமணி, உதவிச் செயற்பொறியாளா் மலா்விழி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com