பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள், 2 கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகள்

சிவகங்கை மாவட்டத்தில் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள், 2 கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகள் மின்கலத்தினால் (பேட்டரி) இயங்கும் சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தசைச்சிதைவு நோய், முதுதுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள் மற்றும் 2 கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலத்தினால் (பேட்டரி) இயங்கக்கூடிய சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த சக்கர நாற்காலிகளைப் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படத்துடன் வரும் நவ. 16 ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com