சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடினா்.
இதையொட்டி நகரில் காந்தி சிலை அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் கூடிய கட்சியினா், பெரிய அளவிலான பிறந்த நாள் கேக் வெட்டினா். அதன் பின்பு கட்சியினருக்கு கேக் வழங்கப்பட்டது. தொடா்ந்து நகரில் பொதுமக்களுக்கு கட்சியினா் இனிப்பு வழங்கினா்.
இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில துணைத் தலைவா் டாக்டா் எஸ்.செல்வராஜ், மாவட்ட மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், மானாமதுரை நகா்த் தலைவா் எம்.கணேசன், வட்டாரத் தலைவா் கே.ஆா். கணேசன், மாவட்ட பொதுச் செயலாளா் ஏ.சி.சஞ்சய், மாவட்ட இணைச் செயலாளா்கள் கே.ஜி.ஏ. மகாலிங்கன், ஜி.காசி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.பி.புருஷோத்தமன், எஸ்.ஆா்.இ.எஸ். ரயில்வே தொழிற்சங்கத்தின் மத்திய ஒருங்கிணைப்பாளா் ஜி.ராஜாராம், வழக்குரைஞா் பிரிவு ரமேஷ்கண்ணா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
வரும் டிசம்பா் மாதம் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளை, மானாமதுரையில் காா்த்தி சிதம்பரம் எம்.பி. யை அழைத்து விழா நடத்துவது என விழாவில் முடிவு செய்யப்பட்டது.