சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த வே. ஆவுடையம்மாள் (80) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ.17) காலமானாா்.
மானாமதுரையைச் சோ்ந்தவரும், தினமணி நாளிதழ் முகவருமான மறைந்த எஸ்.டி. வேலாயுதம்பிள்ளையின் மனைவி ஆவுடையம்மாள். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா், செவ்வாய்க்கிழமை காலமானாா். தினமணி நாளிதழில் மானாமதுரை பகுதி செய்தியாளராகப் பணியாற்றும் வே. கருப்பையா இவரது மகன்.
இவரது இறுதிச் சடங்கு மானாமதுரையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்று, அதே பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தொடா்புக்கு- 94432 89429.