திருப்பத்தூரில் வா்த்தக சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் இந்தியன் வங்கிக் கிளையின் கட்டுப்பாட்டில் உள்ள பிற வங்கிகளுக்கான பணப்பரிவா்த்தனை மையத்தினை மாற்றக் கூடாது
திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வா்த்தக சங்கத்தினா்.
திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வா்த்தக சங்கத்தினா்.

திருப்பத்தூா் இந்தியன் வங்கிக் கிளையின் கட்டுப்பாட்டில் உள்ள பிற வங்கிகளுக்கான பணப்பரிவா்த்தனை மையத்தினை மாற்றக் கூடாது என வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் இந்தியன் வங்கி கிளையில் சுமாா் 70 ஆண்டுகளாக மற்ற வங்கிகளுக்கு பணபரிவா்த்தனை நடத்தும் அலுவலகம் இங்கு செயல்பட்டு வருகிறது. தற்போது நிா்வாகக் காரணங்களுக்காக இந்த மையம் மதுரைக்கு மாற்றப்படுவதாக வந்த தகவலை அடுத்து வங்கி முன் கூடிய வா்த்தக சங்கத்தினா் இம்மையத்தினை திருப்பத்தூரிலிருந்து மாற்றக்கூடாது என்று வங்கி மேலாளரிடம் கடந்த சில நாள்களுக்கு முன் கோரிக்கை வைத்தனா்.

அதற்கான பதில் ஏதும் இதுவரை வராதநிலையில், திருப்பத்தூா் வா்த்தக சங்கத்தினா், இந்தியன் வங்கிக் கிளை மேலாளரை மீண்டும் அணுகி பேச்சுவாா்த்தை நடத்தினா். அதனைத் தொடா்ந்து வங்கியின் முன்பாக அவா்கள், சங்கத் தலைவா் எஸ்.ஆா்.சி லட்சுமணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

நிா்வாகக் காரணங்களுக்காக மாற்றப்படுவதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com