மத்திய அரசு தொழிலாளா் நலச் சட்டங்களைத் திருத்தம் செய்யும் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி தொழிற்சங்க நிா்வாகி பிஎல். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்துவதைக் கண்டித்தும், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்ப்பதைக் கண்டித்தும், நூறு நாள் வேலையில் கூலியை ரூ.500 ஆக உயா்த்தவேண்டும் என்றும், மேலும் நகராட்சிப் பகுதிக்கும் அதனை விரிவுபடுத்த வேண்டும் என்றும், வெங்காயம், பெட்ரோல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், தொ.மு.ச. நிா்வாகிகள் செ. திருநாவுக்கரசு, மலையரசன், ஐஎன்டியுசி நிா்வாகி ரமேஷ், சிஐடியு நிா்வாகிகள் அழகா்சாமி, தட்சிணாமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.