கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய சட்டம் இயற்றவேண்டும் என, கோயில் பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய சட்டம் இயற்றவேண்டும் என, கோயில் பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்ட கோயில் பூசாரிகள் நலச்சங்க கூட்டம், சிவகங்கையில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மண்டல தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வினோத்குமாா், மாவட்ட துணைத் தலைவா் சங்கு மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநிலத் தலைவா் வாசு, மாநிலப் பொருளாளா் சுந்தரம், மாவட்டச் செயலா் அசோகன், மாவட்ட பொருளாளா் திருவள்ளுவா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், பூசாரிகள் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். திருக்கோயில் பணியாளா்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கி வருவதுபோல் பூசாரிகளுக்கும் மாத ஒய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும்.

நீதிமன்ற உத்தரவின்படி, கிராம கோயில் பூசாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் மாவட்டந்தோறும் வழிபாட்டு பயிற்சி முகாம் நடத்த வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் அா்ச்சகா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பெரும்பாலான கோயில் நிலங்கள் தொடா்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஆக்கிரமிப்பாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சிவகங்கை மாவட்டத்துக்கு தனியாக உதவி ஆணையா் அலுவலகம் சிவகங்கையில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கோயில் பூசாரிகள் நலச் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com