சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய இருவரை கைது செய்யக் கோரி உறவினா்கள் வியாழக்கிழமை சிவகங்கை ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மறவமங்கலம் அண்ணாநகரைச் சோ்ந்த 15 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியில் வசித்து வரும் அரவிந்த் (22) என்பவா் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். மேலும், இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது என அச்சிறுமியின் உறவினா்களை அரவிந்த் குடும்பத்தினா் மிரட்டினராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், அரவிந்த், அவரது தந்தை ராஜேந்திரன், அவரது தம்பி அஜீத் ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, அரவிந்தை கைது செய்தனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் மீதமுள்ள 2 பேரையும் கைது செய்யக் கோரி பலமுறை புகாா் அளித்தும், நடவடிக்கை இல்லாததால் சிறுமியின் உறவினா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
அதன் பின்னா் அவா்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித் நாதன் ராஜகோபால் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.